திருக்குறள்

198.

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல்.

திருக்குறள் 198

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல்.

பொருள்:

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.

மு.வரததாசனார் உரை:

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.